சென்னை: நடந்து சென்ற பெண் மீது அரசு பேருந்து மோதிய விபத்து - பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

திருவேற்காட்டில் நடந்து சென்ற பெண் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
accident
accidentpt desk
Published on

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

சென்னை திருவேற்காடு அடுத்த வடநூம்பல், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயா (58). வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் டைல்ஸ் கடையில் வேலை செய்து வந்த இவர், இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக திருவேற்காடு, வேலப்பன்சாவடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தி.நகரில் இருந்து திருவேற்காடு நோக்கி வந்த அரசு பேருந்து வேலப்பன்சாவடி மேம்பாலத்தின் திரும்பிய போது எதிர்பாராத விதமாக எதிர் திசையில் நடந்து வந்த ஜெயா மீது பஸ்ஸின் ஒரு பகுதி மோதியுள்ளது.

Death
DeathFile Photo

இதில், பலத்த காயமடைந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அரசு பஸ் டிரைவர் ஆனந்தம் (48), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

accident
சென்னை: மூன்றாவதும் பெண் குழந்தை - ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூர செயல்!

இந்த பகுதியில் உள்ள சாலை குறுகலாகவும் பொதுமக்கள் நடந்து செல்ல போதிய வழி இல்லாததுமே இந்த விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதுபோல் மேலும் விபத்துக்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com