சென்னை: Pub-ல் நடனமாடிய கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் முகமது சுகைல் (22).ராமாபுரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் MBA முதலாம் ஆண்டு படித்து ராமாபுரத்திலேயே PG ஹாஸ்டலில் தங்கி வந்துள்ளார்.
உயிரிழந்தவர்
உயிரிழந்தவர்புதியதலைமுறை
Published on

Pub-ல் நடனமாடிய கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் முகமது சுகைல் (22).ராமாபுரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் MBA முதலாம் ஆண்டு படித்து ராமாபுரத்திலேயே PG ஹாஸ்டலில் தங்கி வந்துள்ளார்.

உயிரிழந்தவர்
தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம் - முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏறும் அவலம்

இந்த நிலையில், நேற்று இரவு பெண் தோழிகளுடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பப்புக்கு வந்து நண்பர்களுடன் சேர்ந்து நடனம் ஆடிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு சுயநினைவின்றி இருந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

சமீபகாலமாக இளைஞர்கள் சிறு வயதிலேயே மாரடைப்பால் உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com