ஓய்ந்தது விக்ரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை.. சீமான் முதல் உதயநிதி வரை; இறுதியில் பேசியது என்ன?

விக்ரவாண்டி தொகுதியில் போட்டியிடும் தங்கள் சார்பு வேட்பாளர்களுக்கு சார்பாக, அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இறுதிகட்ட பரப்புரை செய்து முடித்தார்கள்.
தலைவர்கள்
தலைவர்கள்புதியதலைமுறை
Published on

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ வாக இருந்த திமுகவின் நா.புகழேந்தி உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியில் இடைத்தேர்தலானது வருகின்ற ஜூலை 10 தேதி நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் அப்பகுதில் தேர்தல் பரப்புரை முடிவுக்கு வந்தது.

தலைவர்கள்
விக்கிரவாண்டி தொகுதி | கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் என்னென்ன? தமிழக அரசு விளக்கம்!

இந்நிலையில், விக்ரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சார்பாக, அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இறுதிகட்ட பரப்புரை செய்து முடித்தனர். இதில், திமுக சார்பில் உதயநிதி அன்னியூர் சிவாவை ஆதரித்து பரப்புரை செய்த காணொளியை பார்க்கலாம்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சியின் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து, பாட்டுப்பாடி வாக்கு சேகரித்தார்.

பா.ம.க கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கட்சியின் போட்டியாளரான சி. அன்புமணியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com