தொட்டில் புடவையில் கழுத்து இறுகி சிறுவன் பலி!

தொட்டில் புடவையில் கழுத்து இறுகி சிறுவன் பலி!
தொட்டில் புடவையில் கழுத்து இறுகி சிறுவன் பலி!
Published on

(கோப்பு புகைப்படம்)

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், தாங்கல் தெருவைச் சேர்ந்தவர் ரகுபதி(38). இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவரது மகன் பாலாஜி (11). 6ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை ரகுபதி தன் மனைவியை அழைத்துக்கொண்டு கடைக்கு சென்றிருக்கிறார். வீட்டில் மகன் பாலாஜி மட்டும் தனியாக விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். 

இந்நிலையில் வீட்டின் கதவு திறந்து இருப்பதைப் பார்த்துவிட்டு, பக்கத்து வீட்டில் வசித்து வரும் கோவிந்தராஜ் என்பவர் வந்துள்ளார். அப்போது சிறுவன் பாலாஜி, தொட்டில் கட்டியிருந்த புடவை கழுத்தை இறுக்கி, மயங்கிய நிலையில் தொங்கியபடி கிடந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாலாஜி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ராயலா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com