ஜல்லிக்கட்டிற்காக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி... இயக்குனர் கௌதமன் கைது

ஜல்லிக்கட்டிற்காக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி... இயக்குனர் கௌதமன் கைது
ஜல்லிக்கட்டிற்காக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி... இயக்குனர் கௌதமன் கைது
Published on

ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கக் கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் மதுரை அவனியாபுரம் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர். போராட்டத்தில் பங்கேற்ற இயக்குனர் கௌதமனும் கைது செய்யப்பட்டார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டில் நடத்த அனுமதிக்க வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை அவனியாபுரம் பேருந்து நிலையம் அருகே ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கக் கோரியும் பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் இளைஞர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் இயக்குனர் கௌதமனும் பங்கேற்றார். இதனிடையே, போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் அறிவுறுத்தியும் இளைஞர்கள் கைவிடாததால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர். இயக்குனர் கௌதமனும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com