இளம் வயதினரை குறிவைக்கும் அயாஹுவாஸ்கா திருவிழா... தமிழ்நாட்டில் சிக்கியது எப்படி?

20 வயதில் இருந்து 35 வயது வரையிலான ஆண்களும், பெண்களுமே இவர்களின் இலக்கு. அயாஹுவாஸ்கா கசாயத்தை குடித்தும், உடலில் சிறிய துளையிட்டு அதில் தவளை விஷத்தை செலுத்தியும் போதையை ஏற்படுத்துகின்றனர்.
அயாஹுவாஸ்கா திருவிழா
அயாஹுவாஸ்கா திருவிழாpt desk
Published on

செய்தியாளர்: அன்பரசன், கார்த்திகா செல்வன்

அயாஹுவாஸ்கா. ஆன்மிக ரீதியான பரவச நிலைக்கான திருவிழாவாக உலகம் முழுவதும் அறியப்படும் ஒரு நிகழ்வு... அமேசான் காடுகளிலும், தென் அமெரிக்க நாடுகளிலும் பழங்குடியின கலாசாரத்தோடு இணைந்தது இந்த அயாஹுவாஸ்கா திருவிழா.

அயாஹுவாஸ்கா என்ற ஒருவகை மூலிகைச் செடியில் இருந்து உருவாக்கப்படும் கசாயம் போன்ற பானம், மன நோய்களை குணப்படுத்துவதற்கும், ஆன்மிக ரீதியான பரவச நிலைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அது போதை நிலைக்கு பயன்படுத்தும் பொருளாக மாற்றப்பட்டுள்ளது.

அயாஹுவாஸ்கா திருவிழா
அயாஹுவாஸ்கா திருவிழாpt desk

மனதில் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கும் அயாஹுவாஸ்காவின் பயன்பாடு இந்தியாவில் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி சட்டவிரோதமாக இந்தியாவிற்குள்ளும் இந்த போதை மூலிகை திருவிழா நுழைந்து விட்டது.

ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் ஜூன் 15 முதல் 2 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. அது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்படி தனிப்படை அமைத்து சல்லடை போட்டுத் தேடினர் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்.

அயாஹுவாஸ்கா திருவிழா
தி.மலை | 'நானே கடவுள்' - மண்டை ஓடுகளுடன் நின்ற கார்; ஆடைகளை களைந்தபடி காவல் நிலையம் சென்ற அகோரி!

அதில் சந்தேகத்தின் பேரில் ரஷ்யாவை சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். முன்னுக்குப் பின் முரணாக அவர்கள் பேச, அதிகாரிகளோ விசாரணையை முடுக்கி விட்டனர். அதில், அவர்கள் கொடுத்த வாக்குமூலம் அதிகாரிகளுக்கே தலைச் சுற்றலை உண்டாக்கியதாக கூறப்படுகிறது.

ரிஷிகேஷ், மணாலி என ஆன்மிகம், சுற்றுலாவில் சிறந்து விளங்கும் பகுதியில் அயாஹுவாஸ்கா திருவிழாவை நடத்தி விட்டு, அதன் வெற்றிக் கொண்டாட்டமாகத்தான் திருவண்ணாமலைக்கு அவர்கள் வந்துள்ளனர்.

அயாஹுவாஸ்கா திருவிழா
அயாஹுவாஸ்கா திருவிழாpt desk

20 வயதில் இருந்து 35 வயது வரையிலான ஆண்களும், பெண்களுமே இவர்களின் இலக்கு. அயாஹுவாஸ்கா கசாயத்தை குடித்தும், உடலில் சிறிய துளையிட்டு அதில் தவளை விஷத்தை செலுத்தியும் போதையை ஏற்படுத்துகின்றனர்.

போதை உச்சத்தை அடையும்போது, கட்டுப்பாடு அற்ற அத்துமீறல்களும், அடாவடிகளும் அங்கு அரங்கேற்றப்படுகின்றன. சுமார் 6 மணி நேரத்திற்கு இது போன்ற மாயத்தோற்றம் இருக்குமாம். இதற்காக நபர் ஒருவருக்கு ஆயிரம் டாலர் வரை அதாவது இந்திய மதிப்பில் 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ரஷ்யர்களிடமிருந்து அயாஹுவாஸ்கா மட்டுமல்ல மேஜிக் மஸ்ரூம், கம்போ எனப்படும் தவளை விஷம் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அயாஹுவாஸ்கா திருவிழா
அப்பாடா பிடிச்சாச்சு...! திருப்பத்தூரில் 11 மணி நேரம் போக்கு காட்டிய சிறுத்தை! சிக்கியது எப்படி?

239 கிராம் சைலோசிபின், டி.எம்.டி போன்ற மனநோய்களுக்கு பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களையும் அவர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் வேறு எந்தெந்த பகுதிகளில் இது போன்ற போதை மூலிகை திருவிழா நடத்த திட்டமிட்டு இருந்தனர், இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்... ஆன்மிகம் என்ற பெயரில் மன குழப்பத்தை உண்டு செய்யும் இது போன்ற நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com