சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் ஒரு விபத்து!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் ஒரு விபத்து!
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் ஒரு விபத்து!
Published on

விருதுநகர் சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. நேற்று சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமான கே.ஆர்.பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 70க்கும் மேற்பட்டோர் இன்று காலை பணியாற்றி கொண்டிருந்தனர். வெடிமருந்து கலவைகளை உள்ளே செலுத்த முற்பட்டபோது எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடி விபத்தில் சுரேஷ் என்பவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com