“விஜய் வந்த பிறகுதான் அவரது செயல்பாடு எப்படி உள்ளது என்பதை பார்க்க முடியும்” - கௌதமி

விஜய் வந்த பிறகுதான் அவரது செயல்பாடு எப்படி உள்ளது என்பதை பார்க்க முடியும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கௌதமி தெரிவித்தார்.
கௌதமி, விஜய்
கௌதமி, விஜய்புதிய தலைமுறை
Published on

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

பூந்தமல்லி ஒன்றிய அதிமுக சார்பில், அதிமுகவின் 53வது ஆண்டு விழா முன்னிட்டு பூந்தமல்லி அடுத்த அகரமேல் பகுதியில் முன்னாள் எம்எல்ஏ மணிமாறன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை மற்றும் அதிமுக கொள்கைபரப்பு துணை செயலாளர் நடிகை கௌதமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நடிகையும் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான கௌதமி
நடிகையும் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான கௌதமி pt desk

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கௌதமி...

“மிகப்பெரிய பொறுப்பை கையில் ஒப்படைத்ததற்கு அதிமுக-விற்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். கொஞ்ச நாட்களுக்கு முன்பே கட்சியில் நான் சேர்ந்திருக்கலாம் என தோன்றுகிறது. ஆனால், நினைவு வந்த காலத்திலிருந்து ஜெயலலிதா என் நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கௌதமி, விஜய்
மாநாடு நடைபெறும் திடல்: ‘தவெக நிர்வாகிகள் உட்பட யாருக்கும் 26ம் தேதி வரை அனுமதி இல்லை’!

“இந்த ஆட்சியில் மத பண்டிகைகளை...”

இப்போது இளைஞர்கள் கையில் டாஸ்மாக்கும் போதைப் பொருளும் இருக்கிறது. எந்த திசையை திரும்பிப் பார்த்தாலும் இருட்டுதான் தெரிகிறது. அதிமுக ஆட்சியில் அனைத்து மதத்தினரும் அவர்கள் மத பண்டிகைகளை சந்தோஷமாக கொண்டாடினார்கள். இப்போது அப்படி சொல்ல முடியாது” என்றார்.

விஜய் அரசியல் வருகை குறித்து...

vijay
vijaypt desk

தொடர்ந்து விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்த கௌதமி, “இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் மக்கள் பணிகளில் ஈடுபடலாம். அனைவரும் அரசியலுக்கு வர வேண்டிய தேவையும் இங்கே உள்ளது. அனைவருக்கும் வரவேற்பும் உள்ளது. இருப்பினும் விஜய் வந்த பிறகுதான் அவர் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை பார்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

கௌதமி, விஜய்
“தவெக மாநாட்டிற்கு அழைக்காவிட்டாலும் கூட்டத்தில் ஒருவனாக கலந்துகொள்வேன்” - நடிகர் விஷால்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com