புதுக்கோட்டை : ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்...!

புதுக்கோட்டை : ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்...!
புதுக்கோட்டை : ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்...!
Published on

பட்டியலின மக்களை இழிவாக பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியை கைது செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2020 பிப்ரவரி 15-ல் அன்பகத்தில் நடந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியிருந்த பேச்சு, பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி சர்ச்சையானது. இதையடுத்து ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்திருந்தார். அதேசமயம் நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான் குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் வைத்து சமீபத்தில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். ஆனால் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், பட்டியலின மக்களை இழிவாக பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியை கைது செய்ய வலியுறுத்தியும், திமுக நிர்வாகிகளை கண்டிக்காத ஸ்டாலினை கண்டித்தும் புதுக்கோட்டை காந்திநகரில், பட்டியலின மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கைகளில் பதாகையை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அதிமுகவினரும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com