"அந்த காமெடியை உருவாக்கியதே அவர்தான்.." - சோகத்துடன் சொன்ன வடிவேலு!

”நடிகர் மாரிமுத்து மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ”மாரிமுத்து இறப்பு குறித்து நான் முதலில் நம்பவில்லை. எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. நெருங்கிப் பழகிய நபர்; அவர் படம்தான் ’கண்ணும் கண்ணும்’. அதில், ’அடித்துக்கூட கேட்பார்கள் சொல்லாதீர்கள்; போலீஸ் வரும்; ஏதும் சொல்லாத. அடிச்சுக்கூட கேப்பாங்க, சொல்லாத’ என்ற காமெடியை அவர்தான் உருவாக்கினார்.

அவருடைய மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் குடும்பத்திற்கு மன தைரியம் வர வேண்டும். ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com