'வெளிநாட்டில் இருப்பவர்களும் எங்க ஊர் திருவிழாவை பார்த்து ரசிக்கின்றனர்' - நடிகர் சூரி பெருமிதம்

மதுரை அருகே தனது சொந்த ஊரில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் குடும்பத்துடன் பங்கேற்று நடிகர் சூரி கொண்டாடினார்.
Actir Soori
Actir Sooript desk
Published on

செய்தியாளர்: ரமேஷ்

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே நடிகர் சூரியின் சொந்த ஊரான ராஜாக்கூர் உள்ளது. இந்த ஊரில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயில் திருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருவிழாவில் பங்கேற்பதற்காக நடிகர் சூரி தனது குடும்பத்தினருடன் சொந்த ஊர் வந்திருந்தார்.

முன்னதாக அவரை வரவேற்கும் வகையில், விரைவில் நடிகர் சூரி நடிப்பில் வெளியாக உள்ள கொட்டுக்காளி திரைப்படம் வெற்றி அடைய வேண்டி ஊரில் வாழ்த்து பதாகைகளை அமைத்திருந்தனர்.

Actor Soori
Actor Sooript desk
Actir Soori
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் குஷ்பு!

இந்நிலையில், இரவில் நடைபெற்ற இன்னிசை கச்சேரியில் கலந்து கொண்ட நடிகர் சூரி பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது, “ திரையில் இப்போதும் பிசியாக பாடக்கூடிய பாடகர்கள் எங்கள் ஊருக்கு வந்து விழாவில் பங்கேற்று இருப்பது எனக்கு மகிழ்ச்சி. வெளிநாட்டில் இருப்பவர்களும் எங்க ஊர் திருவிழாவை பார்த்தேன் எனச் சொல்லும்போது பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com