வேட்டையன் படம் வெற்றி பெற வேண்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் ரக்ஷன் தரிசனம்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படம் வெற்றி பெற வேண்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் ரக்சன் சுவாமி தரிசனம் செய்தார்.
Actor Rakshan
Actor Rakshanpt desk
Published on

செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைப் பிரபலங்களும் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

Actor Rakshan
Actor Rakshanpt desk

இந்த நிலையில் திரைப்பட நடிகரும், சின்னத்திரை பிரபலமான நடிகர் ரக்ஷன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அவருடன் அவரது தாய் மற்றும் பெரியம்மா ஆகியோர் உடன் வந்தனர். அவர்கள் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரூ சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினர்.

Actor Rakshan
MGR-ன் கோபம் to மரியான் ஆச்சர்யம் வரை | கவிஞர் வாலி 11வது நினைவு தின பகிர்வு

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்... “அடுத்தடுத்து நான் இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். நடிகர் ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். அனைத்து படங்களும் வெற்றி பெற வேண்டி இன்று திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வந்தேன்” எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com