”அட்ஜஸ்ட்மெண்ட் கேட்கும் நபர்களை செருப்பால் அடிக்கும் துணிச்சல் வரவேண்டும்” - நடிகர் விஷால் ஆவேசம்

கேரளா நடிகர் சங்கத்தில் எழுந்துள்ள இந்த பிரச்சனையை இந்தியா முழுவதும் உள்ள நடிகர் நடிகைகள் உற்றுநோக்கி வருகின்றனர்.
விஷால்
விஷால்புதியதலைமுறை
Published on

கேரள திரைப்பட உலகத்தில் ஏற்பட்ட பாலியல் புகாரை அடுத்து, தமிழ் திரைப்பட உலகத்திலும் இது போன்ற புகார்கள் உள்ளதா என்பது குறித்து விவாதங்கள் தொடங்கியுள்ளன. ஆகையால் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மாற்றம் வரலாம் என்று பேசப்படுகிறது. ஏனெனில் கேரளா நடிகர் சங்கத்தில் எழுந்துள்ள இந்த பிரச்சனையை இந்தியா முழுவதும் உள்ள நடிகர் நடிகைகள் உற்றுநோக்கி வருகின்றனர்.

மேலும் இது போன்று பாலியல் சீண்டலுக்கு ஆளாவது துணை நடிகைகள்தான். இவர்களுக்கு ஆதரவாக நடிகைகள் குரல் கொடுக்கவேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நேரத்தில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த விஷால்,

”அட்ஜஸ்ட்மெண்ட் கேட்கும் நபர்களை செருப்பால் அடிக்கும் துணிச்சல்வரவேண்டும். தமிழகத்தில் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்பது இல்லை என கூறமுடியாது . காலங்காலமாக இங்கும் நிறைய புகார்கள் இருக்கிறது. ஆனால் தற்பொழுது, தமிழகத்தில் அட்ஜஸ்ட்மெண்ட் புகார்கள் எதுவும் இல்லை - ஆனாலும் இது போன்ற புகார்களை விசாரிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்க திட்டமிட்டுள்ளோம். இது குறித்து விரைவில் அறிக்கை வரும்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com