தஞ்சாவூர் | லிஃப்ட் கேட்ட பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் - 2 பேர் கைது!

தஞ்சாவூர் மாவட்டத்தில் லிஃப்ட் கேட்ட 45 வயது பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இருவரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமைweb
Published on

தஞ்சாவூர் மாவட்டத்தில் 45 வயது பெண், திருமணமானவர். இவர் தனது மகள் வீட்டிற்கு கடந்த 3ம் தேதி இரவு வருவதற்காக பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.

அப்பொழுது அவ்வழியாக சென்ற பிரவீன் (32), ராஜ்கபூர் (25) இருவரும் இருச்சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். பேருந்துக்காக காத்திருந்த 45 வயது பெண்ணிடம் லிஃப்ட் கொடுப்பதாக கூறி ஒரு பைக்கில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர். அவர்களின் பின்னால் ராஜ்கபூர் வந்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அப்போது, அந்த ஊரைத் தாண்டியதும், பிரவீன் மற்றும் ராஜ்கபூர் இருவரும் சேர்ந்து ஆள் இல்லாத வயல் பகுதிக்கு அப்பெண்ணை அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து பெண் கூச்சலிட்டுள்ளார். அவரை தாக்கி விட்டு, பிரவீன், ராஜ்கபூர் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
உகாண்டா | காதலனால் தீ வைத்து எரிக்கப்பட்ட ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீராங்கனை பரிதாபமாக மரணம்!

புகாரின் பேரில் கைது..

இந்நிலையில், வீட்டிற்கு வருவதாக கூறி, தனது அம்மா வெகுநேரமாகியும் வரவில்லை என்பதால், 45 வயது பெண்ணின் மகள் தனது தம்பியை விட்டு தேடிவர சொல்லியுள்ளார். அவர் தேடி வரும் போது வழியில் அப்பெண் அழுதுக்கொண்டு இருப்பதை பார்த்து வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அந்த இளைஞர் வருவதை பார்த்து பிரவீன், ராஜ்கபூர் இருவரும் தப்பியோடியுள்ளனர். இது குறித்து பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரவீன், ராஜ்கபூர் இருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமை
உச்சம் பெறும் கேரள சினிமா பாலியல் குற்றச்சாட்டுகள்.. நடிகர் நிவின்பாலி மீது பாலியல் வழக்குப்பதிவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com