2 ஜி விவகாரத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தவறான புரிதல் இருந்ததாக, முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா விமர்சித்துள்ளார்.
அண்மையில் 2ஜி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து, கடந்த முறை போட்டியிட்ட நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அவர் மக்களை சந்தித்து வருகிறார். நேற்றிரவு மேட்டுபாளையத்தில் பொதுமக்களையும், கட்சியினரையும் சந்தித்த ஆ.ராசா 2ஜி வழக்கு குறித்து எடுத்துரைத்தார்.
தன்னை கைது செய்தால் பிரச்னை முடிந்துவிடும் என மன்மோகன் சிங் நினைத்ததாகவும் அதற்கான பலனை பின்னர் அவர் அனுபவித்ததாகவும் ஆ.ராசா கூறினார்.