நாட்டு வெடிகுண்டு வீசி ஒருவர் கொலை : பழிக்குப்பழியா ?

நாட்டு வெடிகுண்டு வீசி ஒருவர் கொலை : பழிக்குப்பழியா ?

நாட்டு வெடிகுண்டு வீசி ஒருவர் கொலை : பழிக்குப்பழியா ?
Published on

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கடந்த ஆண்டு காலாப்பேட் வட்டார காங்கிரஸ் தலைவர் ஜோசப் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர். இவர் காலாப்பேட் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது நாட்டு வெடிக்குண்டை வீசியுள்ளனர். 

மேலும் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் சந்திரசேகர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சந்திரசேகரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். ஜோசப் கொலைக்கு பழித்தீர்க்கும் வகையில் இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com