வால்பாறை | தாயின் கண் முன்னே சிறுமியை தாக்கிய சிறுத்தை...பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஊசிமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண் முன்னே, சிறுமியை சிறுத்தை தாக்கி இழுத்து சென்று கொன்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறை
வால்பாறைமுகநூல்
Published on

செய்தியாளர் சேதுமாதவன்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஊசிமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண் முன்னே, சிறுமியை சிறுத்தை தாக்கியதில், அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஊசிமலை எஸ்டேட் பகுதியில் தேயிலை பறிக்கும் வேலைக்காக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனுல் அன்சாரி என்பவர், தனது இரு மனைவிகள் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வந்து தங்கி பணிபுரிந்துவருகிறார்.

ஊசிமலை எஸ்டேட் பகுதியில் 2 ஆவது மனைவி மற்றும் தங்கள் 6 வயது மகளுடன் தேயிலை தோட்டத்தில் நிற்கு கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த சிறுத்தை சிறுமியை தாக்கி இழுத்து சென்றது.

இதை பார்த்த மக்கள் சிறுத்தையை விரட்டி சென்று உள்ளனர். இதனால் சிறுத்தை, சிறுமியை விட்டுச்சென்றது. ஆனால் சிறுத்தை தாக்கியதில் சிறுமி இறந்துவிட்டார்.

வால்பாறை
தஞ்சாவூர்: இறுதிச் சடங்கிற்கு நடந்த ஏற்பாடு; திடீரென எழுந்த 105 வயது மூதாட்டி

சிறுமியை தாக்கிய சிறுத்தை அதே பகுதில்தான் பதுங்கியிருப்பதாகவும், சிறுத்தையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com