வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலியை கல்லால் தாக்கிய இளைஞர்கள்

வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலியை கல்லால் தாக்கிய இளைஞர்கள்
வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலியை கல்லால் தாக்கிய இளைஞர்கள்
Published on

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளை புலியை கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்திய 6 இளைஞர்கள் எச்சரிக்கைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். 

பீமா என்ற 6 வயது வெள்ளை புலியை, இளைஞர்கள் சிலர் கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக பார்வையாளர்கள் பூங்கா நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து விஜயன், பிரசாந்த், சந்தோஷ், அருள், சூர்யா, சரத் ஆகிய 6 இளஞர்களை பூங்கா வனச்சரகர் கோபக்குமார் பிடித்து விசாரணை நடத்தினார். 

அவர்களை சட்டப்படி தண்டிக்காமல், சம்பந்தப்பட்ட புலியை தத்தெடுக்கும் வகையில் 6 பேரிடமும் தலா 500 ரூபாயை வசூலித்துவிட்டு, எச்சரித்து அனுப்பினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com