ஜூலை 23 முதல் அடுத்த 23 நாட்களுக்கு, 55 மின்சார ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னையில் வரும் 23 ஆம் தேதி முதல் 23 நாட்களுக்கு, 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மின்சார ரயில்கள்
மின்சார ரயில்கள்முகநூல்
Published on

சென்னையில் மின்சார ரயில் சேவையை ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இச்சூழலில் பராமரிப்பு பணி காரணமாக வரும் 23 ஆம் தேதி முதல், ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை 55 மின்சார ரயில்கள் சேவை நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மின்சார ரயில்
மின்சார ரயில்pt desk

தாம்பரம் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால், தற்காலிகமாக 55 மின்சார ரயில்கள் சேவை நிறுத்தப்படுவதாகவும் தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.

மின்சார ரயில்கள்
புதுப்பொலிவு பெறும் தாம்பரம் ரயில் நிலையம் - 3 டி வரைபடம் வெளியீடு

இதன் காரணமாக மின்சார ரயில்களை பயன்படுத்துவோர் இது தொடர்பான அட்டவணையை பின்பற்றி தங்கள் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com