மர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்

மர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்
மர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்
Published on

ஆவடி மாநகராட்சியில் 40 வயது மதிக்கதக்க பெண் மர்ம காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயில் எட்டியம்மன் நகரை சேர்ந்தவர் மதன். இவரது மனைவி அமுதரசி (40). இவர் கடந்த ஒரு வாரக்காலமாக காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ஆனால் அங்கு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தால், போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அமுதரசி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்தச் சம்பவம் அவரது வீட்டின் அருகே உள்ள மக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com