3 மாடி கட்டடம் இடிந்து விபத்து: தந்தை மகன் பலி

3 மாடி கட்டடம் இடிந்து விபத்து: தந்தை மகன் பலி
3 மாடி கட்டடம் இடிந்து விபத்து: தந்தை மகன் பலி
Published on

திருச்சி, மலைக்கோட்டை அருகே 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் தந்தையும் மகனும் பலியாயினர். 

திருச்சி மாவட்டம், மலைக்கோட்டை அருகே 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. வீடுகளில் இருந்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் கட்டடம் இடிந்து விழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் கார்த்திக் மற்றும் அவரது ஐந்து வயது மகன் ஹரிஷ் ஆகியோர் பலியாயினர். இடிந்து விழுந்த கட்டடத்தில் பெண் ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் பொதுமக்கள், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த கட்டடம் பழைமையான கட்டடம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com