கொடூரமான முறையில் மூவரை கொலை செய்த சைக்கோ கைது

கொடூரமான முறையில் மூவரை கொலை செய்த சைக்கோ கைது
கொடூரமான முறையில் மூவரை கொலை செய்த சைக்கோ கைது
Published on

பெண்கள், சிறுவன் என மூவரை கொடூரமான முறையில் கொலை செய்ததாக வேலூரைச் சேர்ந்த சைக்கோ நபரை ஆந்திர காவல்துறையின‌ர் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் நகரி அருகே சரோஜா என்ற மூதாட்டி, கடந்த ஜூன் மாதம் வீட்டில் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த விசாரணையில், வேலூர் மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் சரோஜாவை கொன்றது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழகத்தில் ஏற்கனவே 2 கொலைகளை செய்திருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

4 ஆண்டுகளுக்கு முன் பரத் என்ற சிறுவனும், கடந்த மாதம் நிர்மலா என்பவரும் ஆனந்தால் கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. நெக்ரோஃபிலிய என்ற விநோத மன நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆனந்த், பெண்களை கொலை செய்தபின், அவர்களின் சடலத்தோடு உறவு வைத்துக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் ஆனந்த், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ள தமிழக காவல்துறையினர், அதுகுறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com