கள்ளக்குறிச்சி | விஷ சாராய வழக்கில் மேலும் 6 பேர் கைது... இதுவரை கைதானவர்கள் எத்தனை பேர்?

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் வழக்கில் மேலும் 6 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சிமுகநூல்
Published on

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் வழக்கில் மேலும் 6 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதன்மூலம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 59 பேர் உயிரிழந்த நிலையில், இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கள்ளச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை வாங்கி சப்ளை செய்த முக்கிய நபர்களான மாதேஷ், சின்னதுரை உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி
புதுக்கோட்டை| கும்பம் ஏற்றும்போது தேர் சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு - 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பென்சிலால், சடையன், ரவி, செந்தில், ஏழுமலை, கவுதம் லால் ஜெயின் உள்ளிட்ட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் அனைவரும் மெத்தனாலை கள்ளச்சாராயம் தயாரிப்பதற்காக விற்பனை செய்து வந்ததாக சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயிரத்து 800 லிட்டர் மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியான மாதேஷ்,சின்னத்துரையை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ள சிபிசிஐடி காவல்துறை, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com