பொங்கலுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்

பொங்கலுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
பொங்கலுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
Published on

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

தமிழகத்தின் பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறை நாட்களை கொண்டது பொங்கல். போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நீண்ட பண்டிகையாக கொண்டாடப்படும். இந்தப் பண்டிகை கிராமங்களில் தான் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்பதால் அங்கிருந்து சென்னை வந்து பணிபுரியும் அனைவரும் பொங்கலுக்கு ஊர் திரும்புவது வழக்கம். இதனால் சென்னை பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு ஏற்கெனவே முடிந்துள்ள நிலையில், பொங்கல் திருநாளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. ஜனவரி 10ஆம் தேதி பயணத்திற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. இதேபோல் ஜனவரி 11ஆம் தேதிக்கான முன்பதிவு நாளையும், ஜனவரி 12ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை மறுநாளும் தொடங்கும். 

ஜனவரி 13ஆம் தேதிக்கான முன்பதிவு வரும் 15ஆம் தேதியும், ஜனவரி 14ஆம் தேதிக்கான முன்பதிவு வரும் 16ஆம் தேதியும் தொடங்குகிறது. பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப வசதியாக ஜனவரி 19ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 20ஆம் தேதிக்கான முன்பதிவு வரும் 22ஆம் தேதியும் தொடங்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com