அம்பத்தூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா : ஆம்புலன்ஸ் டிரைவர், கர்ப்பிணிக்கு பாதிப்பு

அம்பத்தூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா : ஆம்புலன்ஸ் டிரைவர், கர்ப்பிணிக்கு பாதிப்பு

அம்பத்தூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா : ஆம்புலன்ஸ் டிரைவர், கர்ப்பிணிக்கு பாதிப்பு
Published on

அம்பத்தூர் மண்டலத்தில் கர்ப்பிணி பெண் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்பத்தூர் மண்டலத்தில் ஐசிஎப் காலனி பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அம்பத்தூர் ராம் நகரை சேர்ந்த 25 வயது கர்ப்பிணிப் பெண் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்கு சேர்த்து உள்ளனர். அம்பத்தூர் மண்டலத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை மொத்தம் 17 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com