ஸ்னூக்கர் கிளப்பில் சூதாட்டம்: 16 பேரை கைது செய்த தனிப்படை!

ஸ்னூக்கர் கிளப்பில் சூதாட்டம்: 16 பேரை கைது செய்த தனிப்படை!
ஸ்னூக்கர் கிளப்பில் சூதாட்டம்: 16 பேரை கைது செய்த தனிப்படை!
Published on

சென்னை ஸ்னூக்கர் கிளப்பில், சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர்

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலை, கிருஷ்ணா நகரில் ‘ஸ்னூக்கர் பார்லர்’ ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஸ்னூக்கர் பார்லரில் தினந்தோறும் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சென்னை தெற்கு இணை ஆணையர் மகேஸ்வரி தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள், ரூ.1 லட்சத்து 11ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சூதாட்ட கிளப் நடந்தி வந்த நீரஜ் குமார், நாகராஜ், இன்பராஜ் என மூவர் உட்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். நுண்ணறிவு பிரிவு போலீசார் 5 மாதத்திற்கு முன்பு கொடுத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com