புதுக்கோட்டை | 13 வயது பள்ளி மாணவர் சந்தேகத்துக்குரிய வகையில் மர்ம மரணம்!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே 13 வயதான பள்ளி மாணவர் சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டைமுகநூல்
Published on

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பொன்னமராவதி - ஜே.ஜே. நகரைச் சேர்ந்த அழகுமணி - நல்லம்மாள் தம்பதி, அரசு போக்குவரத்துக் கழக பணிமனை எதிரே பலகாரக் கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 13 மற்றும் 11 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். தனியார் பள்ளியில் பயிலும் இவர்கள் இருவரும், வீட்டில் சேட்டை செய்ததால் தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர்களின் 13 வயது மகன், அவர்களது கடையில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சென்ற பொன்னமராவதி காவல்துறையினர் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

புதுக்கோட்டை
தேனி: குடும்பக்கட்டுபாடு செய்து கொண்ட பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் - உறவினர்கள் போராட்டம்

முதலில் சிறுவன் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட நிலையில், உயிரிழந்த சிறுவனின் கால்களில் காயங்கள் இருந்துள்ளன. இதனால் சிறுவனே உயிரை மாய்த்துக் கொண்டாரா, யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா என்பது, உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவரும் என்று, காவல்துறையினர் கூறினர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com