தமிழகத்தில் 10 இடங்களில் சதம் அடித்த வெயில்

தமிழகத்தில் 10 இடங்களில் சதம் அடித்த வெயில்
தமிழகத்தில் 10 இடங்களில் சதம் அடித்த வெயில்
Published on

தமிழகத்தில் இன்று 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கத்தரி வெயில் 28 ஆம் தேதி நிறைவடைகிறது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்துத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக மாறும். இது நாளை புயலாக வலுப்பெறும். இந்தப் புயலுக்கு ஆம்பன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் புயல் 17-ஆம் தேதி வரை வட மேற்கு திசையில் அதன் பிறகு வளைந்து வடக்கு வடகிழக்கு திசையிலும் நகரும். இதனால் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும். கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் காற்றின் ஈர்ப்பு காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள், தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல், லட்சத்தீவு குமரிக் கடல், தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது அவை: கரூர் பரமத்தி மற்றும் திருச்சி 104.3 செல்சியஸ் டிகிரியும், சேலம் 103.2, நாமக்கல் 102.2, திருத்தணி 101.3, தருமபுரி 101.8, வேலூர் 100.9, கோவை 100.7, மதுரை, மதுரை விமான நிலையம் 100.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com