’கடவுளே இந்தியா ஜெயிக்கணும்...’: பாகிஸ்தான் ரசிகர்களின் திடீர் பாசம்!

’கடவுளே இந்தியா ஜெயிக்கணும்...’: பாகிஸ்தான் ரசிகர்களின் திடீர் பாசம்!
’கடவுளே இந்தியா ஜெயிக்கணும்...’: பாகிஸ்தான் ரசிகர்களின் திடீர் பாசம்!
Published on

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்திய அணி வெல்ல வேண்டும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில், இந்திய அணி தான் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்திய அணி 11 புள்ளிகளுடன் இரண்டா வது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடும். ஆஸ்தி ரேலியா முதல் அணியாக அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.

பாகிஸ்தான் அணி, முதல் 5 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று பரிதாபமான நிலையில் இருந்தது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணி களுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. கடைசியாக நடைபெற்ற தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணி களுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. அடுத்து ஆப்கான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு நுழைய அந்த அணிக்கு வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகள் முதல் மூன்று இடங்களை எளிதில் பிடித்துவிடும் என தெரிகிறது. நான்காவது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் உள்ளன. 

இந்திய அணி அடுத்து எதிர்கொள்ளும் இங்கிலாந்து, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அபார வெற்றி பெற்றால் அது பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக முடியும். இந்திய அணி இந்த மூன்று அணிகளிடம் மோசமாக தோற்றால் அது பாகிஸ்தானுக்கு பாதகமாக முடியும். 

இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள், நாளை நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்திய அணி வெற்றி பெற பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

(அப்துல் ஜலீல்)

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர், சவுதாரி அப்துல் ஜலீல் கூறும்போது, ‘’இந்தியா- இங்கிலாந்தை வெல்ல வேண்டும். வென்றால் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும். அதனால் இந்தியாவுக்கு நாளை ஆதரவு தெரிவிப்போம்’’ என்று தெரிவித் துள்ளார்.

இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தான் ரசிகர், குலாம் கான் கூறும்போது, ‘’இந்தியா இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும். கடவுளே அது நடக்கும்’’ என்கிறார். 

மற்றொரு ரசிகர் ஃபைசன் கான், ‘’அரையிறுதியில் அல்லது இறுதிபோட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் கண்டிப்பாக மோதும்’’ என்கிறார், நம்பிக்கையாக.

இதற்கிடையே, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தனது ட்விட்டரில், இந்தியா-இங்கிலாந்து போட்டியில், ’உங்கள் ஆதரவு யாருக்கு?’ என்று பாகிஸ்தான் ரசிகர்களை கேட்டிருந்தார். பெரும்பாலான ரசிகர்கள் இந்திய அணிக்கே தங்கள் ஆதரவு என தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com