சென்னை ஓபனில் முதன்முறையாக பட்டம் வென்றார் பாடிஸ்டா

சென்னை ஓபனில் முதன்முறையாக பட்டம் வென்றார் பாடிஸ்டா
சென்னை ஓபனில் முதன்முறையாக பட்டம் வென்றார் பாடிஸ்டா
Published on

சென்னை ஓபன் டென்னிஸில் முதல்முறையாக ஸ்பெயின் வீரர் ராபர்டோ பாடிஸ்டா சாம்பியன் பட்டம் வென்றார்.

தெற்காசியாவின் ஒரே ஏடிபி டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் டென்னிஸ் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ராபர்டோ பாடிஸ்டாவும், ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவும் மோதினர். இறுதிப்போட்டி என்பதால் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்திருந்தனர். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாடிஸ்டா முதல் செட்டை 6-3 என கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டை கைப்பற்றும் நோக்கில் இரு வீரர்களும் விளையாடினர். இரண்டாவது செட்டை 6-4 என கைப்பற்றி பாடிஸ்டா வெற்றியை தன் வசமாக்கினர். முடிவில் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவை வீழ்த்தி சென்னை ஓபன் பட்டத்தை ராபர்டோ பாடிஸ்டா முதல் முறையாக கைப்பற்றியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com