விவாகரத்திற்குப் பிறகு மகனுடன் நடாஷா வெளியிட்ட படம்.. ஹர்திக் பாண்டியா போட்ட ரியாக்‌ஷன்!

விவாகரத்திற்குப் பிறகு மகனுடன் நடாஷா ஸ்டான்கோவிக் இருக்கும் படத்திற்கு, ஹர்திக் பாண்டியா கமெண்ட் செய்துள்ளார்.
நடாஷா, ஹர்திக்
நடாஷா, ஹர்திக்இன்ஸ்டா
Published on

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்களுடைய இல்வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். இதுகுறித்து ஹர்திக் பாண்டியா வெளியிட்டிருந்த இன்ஸ்டா பதிவில், ”இருவரும் 4 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நிலையில், தற்போது நானும், நடாஷாவும் பிரிந்துசெல்ல முடிவு செய்திருக்கிறோம். எங்கள் இருவரது வாழ்க்கைக்கும் இதுதான் நல்லது என நம்புகிறோம். பரஸ்பர மரியாதை, தோழமையுடன் மகிழ்ச்சியை அனுபவித்த நாங்கள் எடுத்த கடினமான முடிவு இது.

எங்களது மகன் அகஸ்தியா, இருவரின் வாழ்க்கையிலும் தொடர்ந்து இருப்பார். அவருடைய மகிழ்ச்சிக்காக பெற்றோர்களான நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று உறுதியளிக்கிறோம். இந்த கடினமான நேரத்தில் உங்கள் ஆதரவையும் கேட்டுக்கொள்கிறோம்” எனப் பதிவிட்டிருந்தார். இதன்மூலம் அவர்களுடைய 4 ஆண்டு திருமணப் பந்தம் முடிவுக்கு வந்தது. அவர்கள் இருவரும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சமஸ்கிருதத்தில் பகவத்கீதை வாசித்த மாணவர்|மைக்கை பிடுங்கிய பள்ளிமுதல்வர்.. ம.பியில் வெடித்த போராட்டம்

நடாஷா, ஹர்திக்
இலங்கை டூர்| ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்படாதது ஏன்? பின்னணியில் இருந்தது யார்?

இதற்கிடையே, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஹர்திக் பாண்டியா அந்நாட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு இந்திய வீரர்களுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக, இவருக்கு டி20 அணிக்கு கேப்டன் ஷிப் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குடும்பப் பிரச்னை காரணமாகவே அவருக்குப் பதில் சூர்யகுமார் யாதவ்வுக்கு கேப்டன்ஷிப் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் நடாஷா ஸ்டான்கோவிக் தன் மகன் அகஸ்தியாவுடன் செர்பியாவுக்குச் சென்றார். அங்குள்ள தீம் பார்க்கில் தன் மகனுடன் பொழுதைக் கழித்து வருகிறார். மகனும் அந்தப் பூங்காவில் மகிழ்ச்சியாக விளையாடுகிறார். இருவரும் அந்தப் பூங்காவில் எடுத்த படங்களை, நடாஷா தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு ஹர்திக் பாண்டியா, சிவப்பு இதய ஈமோஜி, அதைத் தொடர்ந்து தீய கண், இதயக் கண்கள் மற்றும் ஓகே ஹேண்ட் ஆகியவற்றை பதிவாகப் போட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க; மத்தியப் பிரதேசம்| காவல் துறை வாகனத்தை முந்திச் சென்ற பட்டியலின நபர்.. நிர்வாணமாக்கி சித்திரவதை!

நடாஷா, ஹர்திக்
‘இருவரும் பரஸ்பரம் மனம் ஒத்து பிரிகிறோம்’ - இன்ஸ்டாவில் கூட்டாக அறிவித்த ஹர்திக் பாண்டியா, நடாஷா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com