’இதுபோல சுயநலமான வீரரை பார்த்ததில்லை..’ ஜெய்ஸ்வாலின் சதத்தை தடுத்த கில்? விளாசும் ரசிகர்கள்!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 93 ரன்களை அடித்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
கில் - ஜெய்ஸ்வால்
கில் - ஜெய்ஸ்வால்x
Published on

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற உலக சாம்பியன் அணியாக சென்ற இந்திய அணிக்கு, முதல் போட்டியில் 115 ரன்களை டிஃபண்ட் செய்து யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு வரலாற்று தோல்வியை வழங்கியது ஜிம்பாப்வே அணி.

முதல் போட்டிக்கு பிறகு கம்பேக் கொடுத்த இந்திய அணி அடுத்த 3 போட்டிகளையும் வரிசையாக வென்று 3-1 என தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

கில் - ஜெய்ஸ்வால்
’மிகவும் வலிக்கிறது’ கேன்சரால் தவிக்கும் சகவீரருக்காக நிதி திரட்டும் கபில்தேவ்! BCCI உதவ கோரிக்கை!

ஜெய்ஸ்வால் அதிரடியால் வென்ற இந்தியா!

5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை பெற்றதால் 4வது போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் களம்கண்டது ஜிம்பாப்வே அணி. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக தொடங்க, எப்படியும் 170 ரன்களை நோக்கி ஜிம்பாப்வே செல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து ஜிம்பாப்வே தடுமாற, இறுதியாக களத்திற்கு வந்து அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேப்டன் சிக்கந்தர் ராஷா 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 46 ரன்கள் அடித்து அணியை 153 ரன்களுக்கு அழைத்துச்சென்றார்.

ஜெய்ஸ்வால் - கில்
ஜெய்ஸ்வால் - கில்cricinfo

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் ஜெய்ஸ்வால் 93 ரன்களும், சுப்மன் கில் 58 ரன்களும் அடித்து அசத்த 15.2 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

கில் - ஜெய்ஸ்வால்
“விராட் கோலி பாகிஸ்தான் வந்தால் இந்தியா மீதான அன்பை மறந்துவிடுவார்..”! - ஷாகித் அப்ரிடி

கில் ஒரு மோசமான சுயநல வீரர்..

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் தொடக்கம் முதலே யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் இருந்த சுப்மன் கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அப்போது இந்தியா வெற்றிபெற 25 ரன்கள் தேவையிருக்க, ஜெய்ஸ்வால் 83 ரன்களுடனும், சுப்மன் கில் 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். எப்படியும் கில் ஜெய்ஸ்வால் சதமடிக்க வழிவிட்டு நிலைத்து நின்றுதான் ஆடுவார் என்று பார்த்தபோது, சிக்சர் பவுண்டரி என அதிரடிக்கு திரும்பிய கில் தன்னுடைய அரைசதத்தை பதிவுசெய்தார். சதமடிக்கும் இடத்தில் இருந்த ஜெய்ஸ்வால் 93 ரன்களுடன் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “இப்படிப்பட்ட ஒரு சுயநலமான வீரரை இதுவரை பார்த்ததில்லை” என்றும், “சுப்மன் கில் இல்லை செல்ஃபிஸ் கில்” என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கில் - ஜெய்ஸ்வால்
’ரோகித்திடம் இருந்து அதை எதிர்பார்க்கல!’ - 29 ரன்கள் விளாசப்பட்ட ஓவர் குறித்து ஸ்டார்க் ஓபன் டாக்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com