பார்முக்கு திரும்பிய ரோகித் சர்மா : சென்னை டெஸ்ட்டில் அதிரடி சதம்!

பார்முக்கு திரும்பிய ரோகித் சர்மா : சென்னை டெஸ்ட்டில் அதிரடி சதம்!
பார்முக்கு திரும்பிய ரோகித் சர்மா : சென்னை டெஸ்ட்டில் அதிரடி சதம்!
Published on

சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி சதமடித்தார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் மிகவும் எதிர்பார்ப்புடன் 2ஆவது போட்டி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்ந்தெடுத்தார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் டக் அவுட்டானார்.

இதனையடுத்து ரோகித்துடன் இணைந்து புஜாரா ஜோடி அற்புதமாக விளையாடியது. இந்த ஜோடி அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்தது. களத்தில் தொடர்ந்து நின்று சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 21 ரன்களில் ஜாக் லீச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் யார் அவுட்டானால் என்ன என பிரமாதமாக விளையாடிய ரோகித் அரை சதம் கடந்தார். இதனிடையே கேப்டன் விராட் கோலி மொயின் அலி பந்துவீச்சில் டக்அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

இந்திய அணி உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 80 ரன்களுடனும், ரஹானே 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர். உணவு இடைவேளைக்கு பின்பு ஆட வந்த இருவரும் அட்டகாசமான பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள். இதில் பல கிளாசான ஷாட்டுகளை ரஹானே விளையாடினார். தொடர்ந்து சீரான வேகத்தில் ரன்களைச் சேர்த்த ரோகித் சர்மா சதமடித்தார்.

இதே சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸிலும் சொதப்பிய ரோகித் மீண்டும் பார்முக்கு திரும்பியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்திருக்கிறது. இதனையடுத்து டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய 7 ஆவது சதத்தை அடித்தார் ரோகித் சர்மா. இந்தச் சதத்தில் 14 பவுண்டர்களும், 2 சிக்ஸர்களும் அடங்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com