டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காவிட்டால் என்ன? ஜாலி டூரில் ரோகித் சர்மா!

டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காவிட்டால் என்ன? ஜாலி டூரில் ரோகித் சர்மா!
டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காவிட்டால் என்ன? ஜாலி டூரில் ரோகித் சர்மா!
Published on

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காத ரோகித் சர்மா, தனது மனைவியுடன் ஜாலி டூரில் இறங்கியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணியிடம் இழந்தது. முதல் ஒரு நாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 268 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ்  6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அடுத்து விளையாடிய இந்திய அணி 40.1 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. இந்திய அணியில் ரோகித் சர்மா 137 (114) ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த சதத்தின் மூலம் இங்கிலாந்து நாட்டில் அந்த அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். 

ஆனால் அடுத்தடுத்த ஒரு நாள் போட்டிகள் அவர் சிறப்பாக விளையாடவில்லை. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணிக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் ரோகித் சர்மா சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ரிஷப் பன்ட் சேர்க்கப்பட்டார். இதுபற்றி ட்விட்டரில், ‘சூரியன் நாளை மீண்டும் உதிக்கும்’ என்று கூறியிருந்தார் ரோகித்!

டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும் அவர் ஜாலி டூர் செல்ல முடிவு செய்தார். அதன்படி இங்கிலாந்தில் இருந்து மனைவி ரித்விகாவுடன் செக் குடியரசுக்குச் சென்றார். அதன் தலைநகர் பராகுவேயில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்தனர். சமூக வலைத்தளங்களில் அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ரோகித். அதற்கு ஏராளமானோர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com