ஐபிஎல் 2020: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங் தேர்வு

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங் தேர்வு
ஐபிஎல் 2020: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங் தேர்வு
Published on

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்போடு கொல்கத்தா அணி களம் இறங்க உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ளது.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியை பொருத்தவரை களம் கண்ட இரு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் இரண்டு அணிகளும் தலா 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன‌. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்ப‌டவில்லை.

இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்போடு கொல்கத்தா அணி களம் இறங்க உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com