புரோ கபடி: மகுடம் சூடிய பாட்னா

புரோ கபடி: மகுடம் சூடிய பாட்னா
புரோ கபடி: மகுடம் சூடிய பாட்னா
Published on

புரோ கபடி லீக் தொடரில், பாட்னா பைரேட்ஸ் அணி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சாம்பியன் பட்டம் வென்றது. 

சென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி, குஜராத் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தின. இதனால் பாட்னா அணிமூன்று புள்ளிகள் மட்டுமே முன்னிலையில் இருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் உத்வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாட்னா அணி போட்டியின் முடிவில் 55க்கு 38 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. இதன் மூலம் புரோ கபடி லீக்கில் பாட்னா அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆண்டாக பட்டம் வென்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாட்னா வீரர் பர்தீப் நார்வல் 19 புள்ளிகளை எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com