“இந்தியாவை சந்திக்க தயார்” - பாக். கேப்டன் சர்ஃப்ராஸ்

“இந்தியாவை சந்திக்க தயார்” - பாக். கேப்டன் சர்ஃப்ராஸ்
“இந்தியாவை சந்திக்க தயார்” - பாக். கேப்டன் சர்ஃப்ராஸ்
Published on

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்துவதற்கு தங்கள் அணி முழுமையாக தயாராகியுள்ளதாக பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமத் கூறியுள்ளார். 

ஆசியக் கோப்பை போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகின்றன. முதல் போட்டியில் இலங்கை அணியை வங்கதேசம் தோற்கடித்த நிலையில் நேற்று பாகிஸ்தான் அணி ஹாங்காங் அணியை எதிர் கொண்டது. இதில், பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் சர்ஃப்ராஸ், “ஒரு கேப்டனாக ஹாங்காங் அணி உடனான போட்டியில், பல விஷயங்களை கவனித்தேன். 9 அல்லது 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். புதிய பந்துகளில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் ஆகிய 3 பிரிவுகளிலும் அதிகபட்ச திறமையை வெளிக்காட்ட தமது வீரர்கள் துடிப்பாக உள்ளனர். இதனால், இந்திய அணியை வெல்ல இந்த மூன்று துறைகளிலும் சிறப்பாக விளையாட வேண்டும்” என்று குறிப்பிட்டார். 
ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com