”நேரம் போதவில்லை.. கடிகாரம் நின்றுவிட்டது.. என் விதியும் கூட”- தகுதிநீக்கம் பற்றி மனம்திறந்த வினேஷ்!

100 கிராம் கூடுதல் எடை அதிகமாக இருந்ததால் மல்யுத்தம் 50 கி எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் விளையாட அனுமதிக்கப்படாமல் தகுதிநீக்கம் செய்யப்பட்டார் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்.
vinesh phogat
vinesh phogatweb
Published on

2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத், ஜப்பானின் நம்பர் 1 வீராங்கனையான சுசாகியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி, இறுதிப்போட்டிவரை வந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். ஆனால் இறுதிப் போட்டியில் வென்று தங்கத்துடன் நாடு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட வினேஷ் போகத், நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிகம் இருந்ததால் மல்யுத்த விதிமுறையின் படி கடைசிநேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

வினேஷ் போகத்
வினேஷ் போகத்புதிய தலைமுறை

இந்த செய்தி எப்படியும் தங்கம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் இருந்த இந்திய ரசிகர்களின் தலைமேல் இடியை இறக்கியது. இருப்பினும் மேல்முறையீடு செய்து அரையிறுதிவரை முன்னேறியதற்காக வெள்ளிப்பதக்கம் தரவேண்டும் என சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வினேஷ் போகத் சார்பில் இந்திய ஒலிம்பிக் மனுத்தாக்கல் செய்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக விளையாட்டு நடுவர் மன்றம் இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது.

வினேஷ் போகத்
வினேஷ் போகத்ஒலிம்பிக்ஸ்

இந்நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து மனம்திறந்து பேசியிருக்கும் வினேஷ் போகத், ஒலிம்பிக்கில் தன்னுடன் தங்கியதற்காக தனது மருத்துவர், பிசியோ மற்றும் உதவி ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இதயப்பூர்வமான அறிக்கை ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் விஷயங்கள் தனக்கு சாதகமாக நடந்திருந்தால் 2032 வரை விளையாட விரும்பினேன் என்று தெரிவித்துள்ளார்.

vinesh phogat
”வினேஷ் போகத் இறந்து விடுவாரோ என அஞ்சினேன்”- எடைகுறைப்பு குறித்து பயிற்சியாளர் பகிர்ந்த ஷாக் தகவல்!

கடிகாரம் நின்று விட்டது.. என் விதியும் கூட!

100கிராம் எடையை குறைக்க முடியாமல் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து பேசியிருக்கும் அவர், கடைசிவரை நாங்கள் விட்டுக்கொடுக்கவில்லை, இரவு முழுவதும் எங்கள் போராட்டம் இருந்தது, எங்கள் முயற்சி நிற்கவில்லை ஆனால் கடிகாரம் நின்றுவிட்டது என்று எமோசனலாக பேசியுள்ளார்.

வினேஷ் போகத்
வினேஷ் போகத்ஒலிம்பிக்ஸ் 2024

ஒரு நீண்ட பதிவில் பேசியிருக்கும் வினேஷ் போகத் கடைசியாக, “இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது, ஆனால் அதை எல்லாவற்றையும் பேச வார்த்தைகள் ஒருபோதும் போதுமானதாக இருக்காது, நேரம் சரியாக இருக்கும்போது நான் மீண்டும் பேசுவேன். ஆகஸ்ட் 6ம் தேதி இரவும் மற்றும் ஆகஸ்ட் 7ம் தேதி காலை குறித்து நான் சொல்ல விரும்புவதெல்லாம், நாம் கைவிடவில்லை, முயற்சிகள் நிற்கவில்லை, சரணடையவில்லை, ஆனால் நேரம் போதவில்லை கடிகாரம் நின்றுவிட்டது. என் விதியும் அப்படித்தான் இருந்தது.

எனது குழுவும், எனது சக வீரர்களும், எனது குடும்பத்தினரும், நாங்கள் அனைவரும் சேர்ந்து உழைத்துக்கொண்டிருந்த இலக்கு மற்றும் அடையத் திட்டமிட்டது நிறைவேறாதது போல் உணர்கிறேன். சூழ்நிலைகள் சாதகமாக அமைந்திருந்தால் 2032 வரை நான் விளையாடுவதை என்னால் பார்க்க முடிந்தது, ஏனென்றால் எனக்குள் சண்டையும் என்னுள் மல்யுத்தமும் எப்போதும் உயிருடன்தான் இருக்கும். எனக்கு எதிர்காலம் என்ன, அடுத்த பயணத்தில் எனக்கு என்ன காத்திருக்கிறது என்பதை என்னால் தற்போது கணிக்க முடியாது, ஆனால் நான் எதை நம்புகிறேனோ, அதற்காகவும் சரியான விஷயத்திற்காகவும் எப்போதும் போராடுவேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று போகத் தனது ட்வீட்டில் எழுதியுள்ளார்.

vinesh phogat
எதனால் வினேஷ் போகத் தகுதி நீக்கம்? உலக மல்யுத்த விதிகள் சொல்வது என்ன? யார் இதற்கு பொறுப்பு?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com