பாரிஸ் ஒலிம்பிக்: கீப்பர் ஸ்ரீஜேஷ் அபார தடுப்பாட்டம்.. ஹாக்கியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி!

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி க்ரேட் பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. பெனா ல்டி ஷீட் அவுட் முறையில் நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் 4-2 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்திய வீரர்கள்
இந்திய வீரர்கள்pt web
Published on

பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கியில் இந்தியா அணி பிரிட்டன் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன்மூலம் ஒலிம்பிக்கில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

விறுவிறுப்பான போட்டியில் இந்திய வீரர் அமித் ரோஹிதாஸுக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டு அரங்கை விட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் இந்திய அணி 10 வீரர்களுடன் மட்டுமே விளையாடியது. ஆட்ட நேர இறுதியில் இரண்டு அணியும் சமநிலையில் இருந்ததால் பெனால்டி ஷுட் அவுட் முறையில் இறுதி முடிவு எட்டப்பட்டது.

இதில் இந்தியா பிரிட்டன் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் சிறப்பாக தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com