’சிஎஸ்கே கேப்டனாக தோனியே நீடிப்பார்’: என்.சீனிவாசன் தகவல்

’சிஎஸ்கே கேப்டனாக தோனியே நீடிப்பார்’: என்.சீனிவாசன் தகவல்
’சிஎஸ்கே கேப்டனாக தோனியே நீடிப்பார்’: என்.சீனிவாசன் தகவல்
Published on

அடுத்த ஐபிஎல் போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியே நீடிப்பார் என அதன் தலைவரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவருமான ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், தனியார் கல்லூரியில் கிரிக்கெட் மைதானம்‌ அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரும், சிஎஸ்கே அணியின் உரிமையாளருமான ஸ்ரீனிவாசன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிஎன்பிஎல் போட்டிகள் கோவை மைதானத்தில் நடைபெறும் என உறுதி அளித் தார். கிரிக்கெட் வீரர் தோனியின் ஓய்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அடுத்த ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவரே கேப்ட‌‌னாக நீடிப்பார் என்றார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com