விராத் ஆட்டத்தால் மீண்டது இந்தியா

விராத் ஆட்டத்தால் மீண்டது இந்தியா
விராத் ஆட்டத்தால் மீண்டது இந்தியா
Published on

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விராத் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட்டில் இந்திய அணி தோற்றது. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்று வருகிறது. 

இதில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 335 ரன் குவித்தது. அந்த அணியின்  மார்க்ரம் 94 ரன்களும் ஹாசிம் அம்லா 82 ரன்களும் கேப்டன் டுபிளிசிஸ் 61 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

அடுத்து ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர் விஜய் 46 ரன் எடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினாலும் கேப்டன் விராத் கோலி பொறுப்பாக ஆடி அணியை பெரும் சரிவிலிருந்து மீட்டார். 

2ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன் எடுத்திருந்தது. கோலி 130 பந்துகளில் 85 ரன்களுடனும் ஹர்திக் பாண்டியா 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.  தற்போதைய நிலையில் இந்திய அணி 152 ரன் பின் தங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com