இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீளும்: கேப்டன் ஜோ ரூட்

இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீளும்: கேப்டன் ஜோ ரூட்
இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீளும்: கேப்டன் ஜோ ரூட்
Published on

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி சரிவில் இருந்து மீளும் என அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, பெர்த் நகரில் இன்று நடைபெறுகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இங்கிலாந்து அணி வீரர்களின் மதுபான விடுதி சண்டை இன்னும் ஓயவில்லை. இதன் காரணமாகதான் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆஷஸ் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இந்த தொடரில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இல்லாதது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரின் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் பெர்த்தில் செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஆஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என தெரிவித்துள்ளார். மூன்றாவது டெஸ்ட்டில் டாஸ் வெல்வது முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வாரம் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவோம். அடுத்த வாரம் 2-1 என்ற நிலையில் இருப்போம் என தெரிவித்தார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com