இத்தாலி: முன்னாள் கால்பந்து வீரர் பவுலா ரோஸீ காலமானார்!

இத்தாலி: முன்னாள் கால்பந்து வீரர் பவுலா ரோஸீ காலமானார்!
இத்தாலி: முன்னாள் கால்பந்து வீரர் பவுலா ரோஸீ காலமானார்!
Published on

இத்தாலியின் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் பவுலோ ரோஸீ உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

1982 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின் நாயகன் என்று போற்றப்படுபவர் பவுலோ ரோஸீ. கடந்த 1982 ஆம் ஆண்டு ஸ்பெய்ன் நாட்டில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், 6 கோல்களை அடித்து அந்த போட்டியின் நாயகனாக இத்தாலி மக்களால் போற்றப்பட்டார். மேலும் வைசென்சா, ஜுவெண்டஸ் மற்றும் மிலன் உள்ளிட்ட கிளப் அணிகளுக்காக விளையாடி அதிக கோல்களை அடித்துள்ளார்.

மேலும் உலகின் தலைசிறந்த 125 கால்பந்து வீரர்களில் ஒருவர் என பிரேசில் கால்பந்து வீரர் பீலே, இவரை கடந்த 2004 ஆம் ஆண்டு கவுரவப்படுத்தியுள்ளார். இந்நிலையில் புவலா ரோஸீ உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 64. பவுலா ரோஸீ மறைவை அவரது மனைவி ஃபெடரிக்கா தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். பவுலோ உயிரிழந்ததற்கான காரணத்தை அவரது மனைவி தெரிவிக்கவில்லை. இருப்பினும் பவுலோ ரோஸீ நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக இத்தாலி நாட்டின் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com