“கனவு நினைவாகியுள்ளது” - இன்ஸ்டாகிராமில் ஹர்திக் பாண்ட்யா

“கனவு நினைவாகியுள்ளது” - இன்ஸ்டாகிராமில் ஹர்திக் பாண்ட்யா

“கனவு நினைவாகியுள்ளது” - இன்ஸ்டாகிராமில் ஹர்திக் பாண்ட்யா
Published on

தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ஹர்திக் பாண்ட்யா தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி உட்பட அனைத்து அணிகளும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு எல்லா அணிகளும் இங்கிலாந்து சென்றுவிட்டன. இந்திய அணியினர் நேற்று முதல் பயிற்சியையும் தொடங்கினர்.

இந்த உலகக் கோப்பை தொடரில் போட்டியை மாற்றும் அளவிற்கு முக்கிய பங்களிக்கும் நபர்கள் ஆல்ரவுண்டர்கள். அப்படி இந்திய அணியில் அதிக எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருப்பவர் ஹர்திக் பாண்ட்யா. பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டையும் சிறப்பாக வெளிப்படும் இவர் எதிரணிக்கு நிச்சயம் சவாலாக இருப்பார் எனக் கூறப்படுகிறது. 

மேலும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியது இவருக்கு கூடுதல் பலமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய காலகட்டத்தில் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய அணி வீரர்களின் கவனத்தையும் ஹர்திக் பாண்ட்யா பெற்றுள்ளார். சமீபத்தில் பேசிய கங்குலி, உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா பெரிதும் உதவியாக இருப்பார் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ஹர்திக் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் அவர் 2011ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை குறிப்பிட்டு, 2011ல் உலகக் கோப்பை இந்திய அணியை ஊக்கப்படுத்தினேன். 2019ல் உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்துள்ளேன். கனவு நினைவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். பலரும் ஹர்திக் பாண்ட்யாவின் பதிவுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com