ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணி வெற்றி
Published on

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றியை ஈட்டியது.

கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராபின் உத்தப்பா 39 பந்துகளில் 68 ரன்களும், மணீஷ் பாண்டே 35 பந்துகளில் 46 ரன்களும் விளாசினர். யூசுப் பதான் ஆட்டமிழக்காமல் 21 ரன்கள் எடுத்தார். புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய ஹைதராபாத் அணி முதல் பத்து ஓவர்களில் ரன்குவிக்க திணறியது. தொடக்க வீரர்களான வார்னர் 26 ரன்களிலும், தவான் 26 ரன்களிலும் வெளியேறினர். ஹென்ரிகஸ், தீபக் ஹூடா தலா 13 ரன்கள் எடுத்தனர். வேகமாக ரன்கள் சேர்த்த யுவராஜ் சிங் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹைதராபாத் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com