சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கிய இந்தியா!

சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கிய இந்தியா!
சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கிய இந்தியா!
Published on

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்னை வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி இன்று காலை சேப்பாக்கத்தில் பயிற்சிகளை தொடங்கியது.

இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்ட்டுகள் சென்னையில் பிப்ரவரி 5 முதல் 9ம் தேதி வரையும், பிப்ரவரி 13 முதல் 17ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. 3-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 24 முதல் 28ம் தேதி வரையும், கடைசி டெஸ்ட் மார்ச் 4 முதல் 8ம் தேதி வரை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் அகமதாபாத்திலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புனேவிலும் நடைபெறவுள்ளன.

இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கையில் டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு சென்னை வந்த இங்கிலாந்து அணியினர், கொரோனா தடுப்பு தனிமை முகாமில் இருந்தனர். மேலும், அனைவருக்கும் 3 கட்டங்களாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதல் வலைப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

இங்கிலாந்து வீரர்களுக்கு பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை வலைப் பயிற்சி மேற்கொள்ள நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், இந்திய அணியினரும் கொரோனா தடுப்பு தனிமை முகாமை நிறைவு செய்த நிலையில், அவர்களுக்கும் 3 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் திங்கள்கிழமை மாலையில் சாதாரண பயிற்சியில் ஈடுபட்டனர். பின்பு இன்று காலை சேப்பாக்கம் மைதானம் வந்த அவர்கள் ரவி சாஸ்திரியின் தலைமையில் செவ்வாய்க்கிழமை வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com