சென்னை டெஸ்ட் போட்டி: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!

சென்னை டெஸ்ட் போட்டி: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!
சென்னை டெஸ்ட் போட்டி: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!
Published on

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வரும் 13 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் தொடங்கியது. 50 சதவித பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழகப்பட்டு அதற்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், முதல் 3 தினங்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளது.

மேலும் 4-வது மற்றும் 5-வது நாள் ஆட்டத்திற்கான டிக்கெட்களும் அதன்பின் விற்று முடிந்தன. இதனைத்தொடர்ந்து ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் இருக்கும் கவுண்ட்டரில் பிப்ரவரி 11 ஆம் தேதி காலை 10 மணிக்கு நேரடியாக காண்பித்து முறையான டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்து. மைதானத்துக்கு வரும் ரசிகர்கள் முகக் கவசம் அணிவதும் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com