பாராலிம்பிக்ஸ் | தொடர்ந்து இரண்டாவது முறை வெள்ளி வென்ற இந்தியாவின் சுஹாஸ் யதிராஜ்!

பாராலிம்பிக்ஸ் பாட்மிண்டனில் இந்தியாவின் சுஹாஸ் யதிராஜ் வெள்ளி வென்றுள்ளார். அதேபோல் வில்வித்தையில் இந்திய இணை, வெண்கல பதக்கம் வென்றுள்ளது.
சுஹாஸ் யதிராஜ்
சுஹாஸ் யதிராஜ் பாராலிம்பிக்ஸ்
Published on

பாரிஸ் பாராலிம்பிக்ஸின் 5வது நாளில், எஸ்.எல் 4ஆடவர் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி நடைபெற்றது. இதில், இந்தியாவின் சுஹாஸ் யதிராஜூம், பிரான்ஸின் லூகாஸூம் மோதினர். இந்த போட்டியில் 21 -9, 21 -13 என்ற நேர் செட்களில், லூகாஸ் வெற்றி பெற்றார். இதன்மூலம் பாராலிம்பிக்ஸ் பாட்மிண்டனில், சுஹாஸ் யதிராஜ் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெள்ளி வென்றுள்ளார்.

சுஹாஸ் யதிராஜ்
சுஹாஸ் யதிராஜ்

அதேபோல், வில்வித்தை கலப்பு அணி காம்பவுண்ட் பிரிவில், வெண்கல பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில், இந்தியாவின் ஷீத்தல் தேவி - ராகேஷ் குமார் இணை, இத்தாலியின் சர்தி எலியோனோரா - பொனாசினா மேட்டியோ இணையுடன் மோதியது.

முடிவில் இந்திய இணை 156 - 155 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலத்தை கைப்பற்றியது. தற்போது இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என 15 பதக்கங்களோடு, பதக்க பட்டியலில் 15வது இடத்திலுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com