கடைசி டி-20: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?

கடைசி டி-20: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?
கடைசி டி-20: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?
Published on

இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் இன்று நடக்கிறது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இப்போது 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடக்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது.இரண்டாவது போட்டியில் இந்திய அணி வென்றது. மூன்றாவது போட்டி, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. 

2-வது போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டது. கேப்டன் விராத் கோலி, தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விக்கெட் கீப்பர் ரிஷாப், தனது வாய்ப்புகளை வீணடித்து வருகிறார். தவறான ஷாட்களை தேர்ந்தெடுத்து அவர் ஆட்டமிழப்பது, அணி நிர்வாகத்தை கவலைகொள்ள செய்திருக்கிறது. அதனால், இன்றைய போட்டியில் அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கடந்த போட்டியில் ஆடிய வீரர்களே இந்தப் போட்டியிலும் இடம் பிடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. 

தென்னாப்பிரிக்க இளம் வீரர்களை கொண்ட அணியாக இருக்கிறது. அந்த அணியில் கேப்டன் டிகாக், பவுமா, வான்டர் டுஸன், டேவிட் மில்லர் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தும் தடுமாறி வருகிறது. இன்றைய போட்டியில் தங்கள் தவறுகளை திருத்திக்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். போட்டி நடக்கும் சின்னச்சாமி மைதானம் சிறியது என்பதால் வீரர்கள் ரன் மழை பொழிவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com