இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்பும் ஜேசன் கில்லெஸ்பி

இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்பும் ஜேசன் கில்லெஸ்பி
இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்பும் ஜேசன் கில்லெஸ்பி
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவி குறித்து எதிர்காலத்தில் நிச்சயம் பரிசீலிப்பேன் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஜேசன் கில்லெஸ்பி தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கில்லெஸ்பி, 2 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி குறித்து நிச்சயம் நான் பரிசீலிப்பேன் என்று மனம்திறந்துள்ளார். சமீபத்தில் நடந்த இந்திய அணியின் பயிற்சியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்து குழப்பத்தில் இருந்ததாகவும், இதுதொடர்பாக தனது குடும்பத்தாருடன் கலந்தாலோசித்ததாகவும் கில்லெஸ்பி தெரிவித்தார். ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 1996ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை விளையாடிய கில்லெஸ்பி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், பல்வேறு அணிகளின் பயிற்சியாளராக பதவி வகித்துள்ளார். இங்கிலாந்தின் பிரபல உள்ளூர் தொடரான கவுண்டி கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் யார்க்‌ஷயர் அணியின் பயிற்சியாளராகவும், ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் இருக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com